Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கொட்டகலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!

கொட்டகலை பெருந்தோட்ட தொழிலாளர்கள் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம்!

1 minutes read

நுவரெலியா- கொட்டகலை, டிறேட்டன் டீ.டி.பிரிவு தோட்டத் தொழிலாளர்கள், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாட்டினை கண்டித்து, இன்று (திங்கட்கிழமை) போராட்டமொன்றினை முன்னெடுத்துள்ளனர்.

20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றனர். ஆகவே தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மேலும் கூறியுள்ளதாவது, “ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், 800 ரூபாயே இன்னும் வழங்கப்படுகின்றது.

நாளொன்றுக்கான பெயருக்கு 17 கிலோ கொழுந்தே முன்னர் பறிக்கப்பட்டது. ஆனால் தற்போது 20 கிலோவுக்கு குறைவாக பறிப்பவர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என நிர்வாகத்தால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே இவ்விடயத்தில் தொழிற்சங்கங்கள் உடனடியாக தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் சம்பளத்துக்கு போராடினால் தொழிலாளர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள். அடிப்படை நாட் சம்பளத்துக்கு 17 கிலோ கொழுந்து பறித்தால் போதும் என்ற ஏற்பாடு உள்ள நிலையில் கம்பனிகள் தான்தோன்றித்தனமாக செயற்படுகின்றன.

தொழிலாளர்களை அடிமைகளாக வழிநடத்தும் செயற்பாட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. எனவே அரசாங்கம் இப்பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More