நுகர்வோரிடம் நிலுவைத் தொகையாகவுள்ள 5.1 பில்லியன் ரூபா இன்னும் வசூலிக்கப்படாததால், நீர் விநியோக செயல்முறையில் ஏற்படும் செலவுகளை ஈடு செய்ய முடியாமல் கடுமையான நிதி சிக்கல்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது. மொத்த நிலுவைத் தொகையில், பாவனையாளர்கள் சுமார் 3700 மில்லியன் ரூபா வும் மருத்துவமனைகள், அரச அலுவலகங்கள், இராணுவ முகாம்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் 265 மில்லியன் ரூபாவும் செலுத்த வேண்டும் என சபையின் உதவிப் பொது முகாமையாளரான ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்தார்.
மேலும், 700 மில்லியன் ரூபாவை வர்த்தக மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செலுத்த வேண்டும். அத்துடன் மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் ஏனையவற்றிலிருந்து 60 மில்லியன் ரூபா வசூலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்றால் வழங்கப்பட்ட கால அவகாசமே நீர் கட்டணக் கொடுப்பனவுகளில் இத்தகைய பற்றாக்குறை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு காண உரிய கொடுப்பனவுகளை விரைவில் செலுத்துமாறு மக்களிடம்
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், எதிர்காலத்தில் நீர் விநியோகத்தில் இடையூறுகள் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.