ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பதவி நீக்க பிரேரணையைக் கொண்டு வருமாறு ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த யோசனையை முற்றாக நிராகரித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவுக்கு தற்போது பாராளுமன்றத் தில் பெரும்பான்மை இல்லாத காரணத்தினாலும் அதற்குத் தேவையான ஆதரவை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியாத நிலையிலும் சஜித் பிரேமதாச பதவி நீக்க பிரேரணையை நிராகரித்துள்ளதாகத் தெரிய வருகின்றது.