கடவத்தை பிரதேசத்திலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையமொன்றில் 270 இலட்சத்திற்கும் அதிக பணத்தை கொள்ளையிட்ட சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று ஆடை விற்பனை நிலைய உரிமையாளரால் கடவத்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாட்டுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய , குறித்த ஆடை விற்பனை நிலைய கட்டடத்தொகுதியின் மேல் மாடியில் வைக்கப்பட்டிருந்த பாரிய தண்ணீர் தாங்கியின் அருகில் மறைந்திருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 27 219 380 ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
32 வயதுடைய குறித்த சந்தேகநபர் நாகொல்லாகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் எதிர்பாராத நேரத்தில் ஆடை விற்பனை நிலைய ஊழியர் ஒருவர் அங்கு வருகை தந்தமையின் காரணமாக, குறித்த இடத்திலேயே மறைந்திருந்து பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடவத்தை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.