தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்களை நேற்றையதினம் அமெரிக்கத் தூதுவர் ஜுலி சங் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்று மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் உள்ளிட்டோர் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இலங்கைக்கான அமொிக்க தூதுவர் ஜுலி சங் 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நிலையில், அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளதுடன் முக்கிய மதஸ்தலங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.