மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளி கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக இன்று வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
காளி கோயில் வீதி கதிரவெளியை சேர்ந்த ஜீவானந்தம் விமல்ராஜ் (வயது 22) வைத்தியசாலை வீதியைச் சேர்ந்த புலேந்திரன் அனுஷ்காந் (வயது 23), புதூர் கதிரவெளியைச் சேர்ந்த தங்கவேல் சஜிதன் (வயது 26) ஆகிய மூன்று இளைஞர்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கதிரவெளி கடலில் குளிப்பதற்கு நான்கு இளைஞர்கள் சென்ற நிலையில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஒரு இளைஞர் நீந்தி கரை சேர்ந்து உள்ளதாகவும் தெரியவருகிறது.
உயிரிழந்த இளைஞர்களின் சடலம் கதிரவெளி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த மரணச் சம்பவம் தொடர்பில் கதிரவெளி பிரதேசம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த 10 ஆம் திகதி முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்திருந்தனர்.
பத்மநாதன் விஜித் பத்மநாதன் அமரர் விழித்திரன் புத்மநாதன் விஸ்வநாதன் காலத்தின் சூழ்ச்சியால் எங்களை விட்டு பிரிந்தாய் ஆனால் எங்கள் மனதில் இருந்து பிரியவில்லை.’
முல்லைத்தீவு, அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழுஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்றிருந்த நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில் அதனையும் பொருட்படுத்தாது கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட நிலையில் அவரை காப்பாற்றும் நோக்கோடு ஏனைய இரு சகோதர்களும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
யாழ்வீதி அலம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே இவ்வாறு அலையில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்கள் ஆவர்.