Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ராஜபக்ச குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கு விடிவு

ராஜபக்ச குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கு விடிவு

1 minutes read

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே நாட்டுக்கு விடிவு கிடைக்கும் என்று மலையகத் தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிரக் குறைந்ததாகத் தெரியவில்லை.

ராஜபக்ச குடும்பத்தினர் வீட்டுக்கு சென்றால்தான் நாட்டுக்கு விடிவு: மலையகத் தொழிலாளர் முன்னணி

அரசாங்கம் முதலில் வெளியேற வேண்டும்
இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சுமுகமான நிலைமைக்குக் கொண்டுவர முடியாத இந்த அரசு முதலில் வெளியேற வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசு இருந்து என்னதான் பயன்?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவி செய்ய முன்வருவார்கள்.

அப்போதுதான் நாட்டில் பஞ்சம் தீர்க்க வழி பிறக்கும். எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும், மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தருவதாகவே வாக்குறுதி வழங்கப்படுகின்றது.

அதேநேரத்தில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இந்த வாக்குறுதிகளுக்கு அப்பால் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகின்றார்கள்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More