மட்டக்களப்பு,ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் செவ்வாய்கிழமை (12) இரவு காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஆயித்தியமலை வடக்கில் வசித்த, போரதீவைச் சேர்ந்த(54வயது) முண்டாப்போடி விஜயராசா என்பவரே யானை தாக்குதலில் பலியானவராவார்.
ஆயித்தியமலையிலுள்ள தனது வீட்டிலிருந்து உன்னிச்சை மாரியம்மன் ஆலயத்துக்கு செல்லும்போது நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில் நின்ற காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே அவர் பலியானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.