Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆளும் கட்சி உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்

ஆளும் கட்சி உறுப்பினர்களை இன்று சந்திக்கிறார் ஜனாதிபதி ரணில்

1 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்று நிதியமைச்சில் இடம்பெறவுள்ளது.

அரசாங்கத்தின் அடுத்தக்கட்ட நடவடிக்கை,சர்வக்கட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து அவதானம் செலுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும்,ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்குமிடையிலான முதலாவது சந்திப்பு இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 18 அமைச்சுக்களை உள்ளடக்கிய அமைச்சரவை கடந்த 22ஆம் திகதி நியமிக்கப்பட்டது.

புதிய அமைச்சரவையின் செயற்பாடுகள,அரச செலவினங்களை மட்டுப்படுத்தல்,எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சு மட்டத்தில் செயற்திட்டங்களை வகுத்தல்,செயற்படுத்தல் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

நிலையான அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்காக பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல அரசியல் கட்சிகளையும் ஒன்றினைத்து சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுஜன பெரமுன,அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல தரப்பினருட் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தவுள்ளதாக ஆளும் தரப்பினர் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

சர்வக்கட்சி அரசாங்கத்தின் வியூகம்,அமைச்சுக்களின் எண்ணிக்கை மற்றும் விடயதானங்கள் தொடர்பில் விரிவுப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சர்வக்கட்சி அரசாங்கத்தில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது தொடர்பில் கொள்கை ரீதியில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More