Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

யாழ் ராணியில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்கள் சிலர் பளையில் இறங்கி தப்பியோட்டம்

1 minutes read

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி இன்று (24) காலை பயணித்த உத்தியோகத்தகர்கள் பல பளை புகையிரத நிலையத்தில் இடை நடுவில் இறங்கி தப்பியோடியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வழமை போல் யாழ் ராணி புகையிரதத்த்தில் கிளிநொச்சி நோக்கி பயணித்த உத்தியோகத்தர்களில் சிலர்பயணச் சீட்டு பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.

மிக குறைந்த கட்டணமாக உள்ள போதும் அதனை பெற்றுக்கொள்ளாது பயணித்துள்ளனர்.

ஆனால் இன்று புதன்கிழமை பயணச் சீட்டு பரிசோதனை செய்யும் புகையிரத திணைக்கள அதிகாரிகள் பயணிகளிடம் பரிசோதனைகளை மேற்கொண்ட போது ஒரு சிலர் பயணச்சீட்டு இன்றி பயணித்தமை கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் பயணக்கட்டணமும் தண்டப் பணமும் அறவிடப்பட்டடுள்ளது.

அத்தோடு மூன்றாம் வகுப்புக்கு பயணச்சிட்டையை பெற்றுவிட்டு இரண்டாம் வகுப்பில் பயணித்தவர்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிளிநொச்சி நோக்கி பயணித்த மேலும் சிலர் புகையிரத திணைக்கள அதிகாரிகளின் பரிசோதனைக்கு முன்பாகவே இடைநடுவில் பளை புகையிரத நிலையத்தில் இறங்கி சென்றமையினையும் அவதானிக்க முடிந்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More