காலி – பிட்டிகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரொருவர் மீது, அப்பகுதியில் மறைந்திருந்த பிரிதொரு நபரால் இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் போது காயமடைந்த மீயாகம, தல்கஸ்வ பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபர் , கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் பணத்தகராறு என்றும் , சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தப்பிச் சென்றுள்ள சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.