முல்லைதீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்குற்பட்ட மல்லாவி யோகபுரம் மகா வித்தியாலயத்தில் தேசிய ரீதியில் தமிழ்த்தின போட்டியில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
தமிழ் அறிவு வினாபோட்டி மற்றும் தமிழ் இலக்கண அறிவு போட்டி என்பனவற்றில் சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வே நேற்று இடம்பெற்றிருந்தது.
சாதனை மாணவர்கள் மல்லாவி நகர் பகுதியிலிருந்து மாலைகள் அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பான்ட் வாத்தியங்கள், இசை கச்சேரிகள் முழங்க பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.