நாட்டில் இன்றும் (நவ 13) பல பிரதேசங்களில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலையில் மழை பெய்யலாம்.
மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் உள்ள சில பிரதேசங்களில் 75 மில்லி மீற்றரளவில் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்கள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.