நான் ஸ்ரீலங்கா சுதந்திரகட்சியிலேயே பிறந்தேன் அந்த கட்சியிலேயே வளர்ந்தேன் இறுதி வரை அந்த கட்சியிலேயே இருப்பேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்
முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளதுடன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
நான் ஐக்கியதேசிய கட்சியில் அல்லது ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டுள்ளேன் என பல ஊடகங்கள் தெரிவித்துள்ளேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து விலகி நான் வேறு கட்சியில் சேரப்போவதில்லை சேரமாட்டேன் என நான் மீண்டும்மீண்டும் வலியுறுத்துகின்றேன்.
நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே பிறந்தேன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலேயே வளர்ந்தேன்.
பல சக்திகள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மீது தாக்குதலை மேற்கொண்டன.
இறுதியில் நான் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாகவே மரணிக்க விரும்புகின்றேன்.
பல தவறான கொள்கைகளை பின்பற்றியதால் இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆகவே நான் பண்டாரநாயக்கவின் கொள்ளைகளை பாராட்டுகின்றேன் அந்த கொள்கையை ஏற்று தெளிவான கொள்கை அடிப்படையில் நான் பணியாற்றுகின்றேன்இஅதனடிப்படையில் எந்த கட்சிக்கும் ஆலோசனை வழங்குகின்றேன்.
நாட்டில் சிறுவர்களின் மந்தபோசாக்கு நிலைமை மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வை காணுதல் என்ற இரண்டு பிரச்சினைகளிற்கு தீர்வை காணும் விடயத்தில் நாட்டின் பொறுப்பான தலைவர் என்ற அடிப்படையில் நான் ஆலோசனை வழங்குகின்றேன்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தற்போதைய தலைவர்கள் தங்கள் குறுகிய நோக்கங்களிற்காக கட்சியின் கொள்கைகளிற்கு துரோகமிழைக்கின்றனர்இஎனவும் அவர் தெரிவித்துள்ளார்.