காலி – பூஸா சிறைச்சாலையின் விசேட பிரிவுக்கு உள்நுழையும் பகுதியில் புதைக்கப்பட்டிருந்த ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன் சிம் அட்டைகள், மின்னேற்றி என்பனவும் மீட்கப்பட்டன என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை வளாகத்தில் உள்ள, வடிகான்களைச் சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதே குறித்த பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றை, மேலதிக விசாரணைகளுக்காக சிறைச்சாலைகள் தலைமையகத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.