Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்!

வாய், கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம்!

1 minutes read

இரத்தினபுரி – கடகரெல்ல பாலத்துக்கு அருகில் கார் சாரதி ஒருவர் கைகள் மற்றும் வாய் துணியால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று இங்கிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

48 வயதுடைய மினுவாங்கொடை, கல்லொழுவைப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பாணந்துறை – இரத்தினபுரி வீதியில் கடகரெல்ல பாலத்துக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் ஒருவர் இங்கிரிய பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வாடகை வாகனத்தில் சாரதியாகச் சென்ற தனது சகோதரர் தொடர்பில் எவ்வித தகவலும் இல்லை என உயிரிழந்தவரின் சகோதரர் மினுவாங்கொடைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து இங்கிரிய பொலிஸாரால் இனந்தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக முறைப்பாட்டாளருக்கு அறிவித்ததன் பேரில் ஹொரண வைத்தியசாலைக்குச் சென்ற அவரது சகோதரர் சடலத்தை அடையாளம் காட்டியுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More