உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி நடத்தப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்தினதும் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தேர்தல் நடத்தப்படும் உள்ளூராட்சி சபைகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு எதிர்வரும் மார்ச் 9 ஆம் திகதி, காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
339 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் பதிவு செய்யப்பட்ட 58 அரசியல் கட்சிகள் மற்றும் 329 சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 80 ஆயிரத்து 720 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.