Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தோல்விப் பயத்தால் பதறும் ரணில் – ராஜபக்ச அரசு!

தோல்விப் பயத்தால் பதறும் ரணில் – ராஜபக்ச அரசு!

1 minutes read

தோல்வி அச்சத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கான பல்வேறு சூழ்ச்சிகளை ரணில் – ராஜபக்ச அரசு மேற்கொண்டு வருகின்றது என இலங்கையின் பிரபல தொழிற்சங்கம் ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.

தேர்தலை நடத்தாமல் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமையை இல்லாது செய்வதற்கு அரசு முயற்சிக்கின்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என இலங்கை அச்சகம் அறிவித்துள்ள விடயமானது சூழ்ச்சியின் ஓர் அங்கம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரச அச்சகத் தலைவரின் ஊடாக இந்தச் சூழ்ச்சி இடம்பெறுகின்றது. வரலாற்றில் ஒரு நாளும் பணம் இல்லை என்று இவை இடம்பெறவில்லை. பணம் இல்லையென்றே இந்த நாடகம் நடக்கின்றது.

இலங்கை மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காத தற்போதைய அரசு வாக்குரிமையையும் இல்லாது செய்வதற்கான முயற்சிகளை முன்னெடுக்கின்றது. எனினும், அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவது இல்லை” – என்றார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More