Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

தபால் மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

1 minutes read

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் இன்று வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்கெடுப்பு இடம்பெறாது என்றும், அதற்கான உத்தியோகபூர்வ திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

எனினும், வாக்கெடுப்பை ஒத்திவைக்கப்பதற்கான காரணிகள் தற்போது இல்லை என்று முன்னதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், தபால் மூல வாக்கெடுப்பு, மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணைப்படி தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பில், உறுதியளித்தவாறு அரச அச்சகத்தால் உரிய வாக்குச்சீட்டுகள் வழங்கப்படாமையால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More