Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்

1 minutes read

11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதவான் நாமல் பெரேரா உத்தரவிட்டார்.

இதன் போது கம்பளை ஹெட்காலை சாக் கம்மான கிராமத்தைச் சேர்ந்த குடும்பஸ்தரான  நபரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறுமின் தாயின் பிறந்த நாள் கொண்டாடுவதற்காக பொருட்கள் வாங்க சிறுமி கடைக்கு போய் வந்த சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார். அதன்பின் பல்வேறு சந்தர்ப்பங்களில் தொடர்ந்து அச்சுறுத்தி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமி பாடசாலையில் சோர்ந்து காணப்பட்டதையடுத்து வகுப்பு ஆசிரியை வினவிய பொழுதே குறித்த விடயம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தாய் வரவழைக்கப்பட்டு சிறுவர் பாதுகாப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

பின்னர் வெள்ளிக்கிழமை (24) கம்பளை ஹெட்காலை பொலிஸாரினால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதி மன்றில் நிறுத்திய பொழுதே மேற்கண்ட உத்தரவினை நீதவான் பிறப்பித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More