Sunday, May 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத்தினர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

வவுனியாவில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட குடும்பத்தினர் மரணத்தில் நீடிக்கும் மர்மம்

1 minutes read

வவுனியா, குட்ஷெட் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து அண்மையில் சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதியர் மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகளின் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் நேற்று வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் இடம்பெற்றன.

வவுனியா நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போதிலும் மரணத்துக்கான சரியான காரணம் நேற்று வெளியாகவில்லை.

வைத்தியசாலையின் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் சடலங்கள் மீதான பிரேதப் பரிசோதனைகள் தாமதமாகியுள்ளதாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தமைக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடல் உறுப்புகள் மற்றும் இரத்த மாதிரிகள் அரசாங்க மரண விசாரணைத் திணைக்களம் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டுத்தலைவர் கடனை செலுத்த முடியாத காரணத்தினால் இந்த மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் அதுதான் சரியான காரணம் என்று கூற முடியாது என உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் வெளிநாட்டு முகவர் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில், மனைவி வவுனியா பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளார்.

இதேவேளை உயிரிழந்தவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.சம்பவ தினத்தன்று அந்த வீட்டுக்கு ஹயஸ் வாகனம் ஒன்று வந்து சென்றுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வாகனத்தில் வந்தவர்கள் யார் என்பது தெரியாத நிலையில் அது தொடர்பாக பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More