நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அப்பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
இதன்போது மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
அதேவேளை நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகளில் தென்கிழக்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து காற்று வீசக்கூடும்.
அக்காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை பதிவாகும் சாத்தியம் உண்டு.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.
எனினும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் உள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் கடல் சற்று கொந்தளிப்பாகவும் காணப்படலாம்.