சமூக ஊடக தளங்களில் பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள் குறிப்பாக வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ கூறுகையில்,
சமூக ஊடக தளங்களில் புத்தாண்டு பண்டிகை காலத்தின் போது தங்களின் பல்வேறு நடவடிக்கைகள், வெளிப்புற சுற்றுப்பயணங்கள் பற்றிய விவரங்களைப் பகிர்வதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
இந்த காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் குழுக்கள் இந்த தகவல்களை பயன்படுத்தி வீடுகளில் கொள்ளையடிப்பதற்கு முடியும்.
மேலும் வீடுகளை விட்டு வெளியே வருபவர்கள் சி.சி.டிவி கேமராக்களை பொருத்திக்கொள்ளவும். கொள்ளை சம்பவங்களைத் தடுக்க காட்சிகளை தொடர்ந்து கண்காணிக்குமாறும் அவர் தெரிவித்தார்.