Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை? நீதிமன்றினால் நிராகரிப்பு!

தமிதாவுக்கும் கணவருக்கும் அழைப்பாணை? நீதிமன்றினால் நிராகரிப்பு!

0 minutes read

தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோருக்கு  அழைப்பாணை விடுக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களம் விடுத்த கோரிக்கையை கோட்டை நீதிவான் திலின கமகே நிராகரித்துள்ளார்.

கொரியாவுக்கு அனுப்புவதாகக் கூறி தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் 30 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், முறைப்பாடு தொடர்பில் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் விடுத்த அறிவித்தல் புறக்கணிக்கப்பட்டமையினால் நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வழங்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இவர்கள் இருவரும் சந்தேக நபர்களாக பெயரிடப்படாததால் நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்க முடியாது என கோட்டை நீதிவான் திலின கமகே தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More