செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

யாழில் முதியவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது !

0 minutes read

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரை கழுத்து நெரித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக முதியவருடன் வசித்து வந்த இளைஞன் தெரிவித்துள்ளார்.

மரணத்தில் சந்தேகம் காணப்பட்டமையால் , சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதான வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

உடற்கூற்று பரிசோதனையில் முதியவர் கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் முதியவருடன் வசித்து வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர்  நேற்று திங்கட்கிழமை (01)   யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More