இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் மாவீரர் நாள் தமிழகத்திலும் பல பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியினரின் ஏற்பாட்டிலேயே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், குறித்த மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
இதற்கமைய, இராமநாதபுரம் மாவட்டம்- இராமேஸ்வரத்திலுள்ள அக்னிதீர்த்த கடற்கரையில், இறுதி கட்ட யுத்தத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரவு சுமார் 7 மணி அளவில் பாடல் இசைக்கப்பட்டு, கண்ணீர் மல்க மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் இராமநாதபுரம், திருப்புல்லாணி, திருவாடனை, முதுகுளத்தூர், கடலாடி, ஆர்.எஸ்மங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்விற்கு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.