Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் ‘சர்கார்’ பட பாணியில் வாக்கை செலுத்திய இளைஞர்

‘சர்கார்’ பட பாணியில் வாக்கை செலுத்திய இளைஞர்

1 minutes read

16 ஆவது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று 06 ஆம் திகதி காலை 07.00 மணி அளவில் ஆரம்பமானது.

இந்நிலையில், திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் சர்கார் பட பாணியில் 49பி சட்டப்பிரிவை பயன்படுத்தி வாலிபர் ஒருவர் வாக்கை பதிவு செய்துள்ளார்.

வாலிபர் ஒருவர் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட (பாகம் எண் 190 வரிசை எண் 990),  மேல கல்கண்டார்கோட்டை பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்ய சென்றார். அப்போது அவரது வாக்கை யாரோ கள்ள வாக்காகச் செலுத்தியது தெரியவந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து வாக்குச்சாவடி அலுவலரிடம் தான் யார் என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் ’49 P’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கை செலுத்தியுள்ளார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More