பிரெஞ்சு மகளிர் கால்பந்தாட்ட அணியின் 3 முன்னிலை நட்சத்திரங்கள் மூவர் அவ்வணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அணித்தலைவர் வெண்டீ ரெனார்ட், கடிடியாட்டோ டியானி, மேரி கடோடோ ஆகியோர் இவ்வாறு அணியிலிருந்து விலகியுள்ளனர். வெண்டி ரெனார்ட் பிரான்ஸின் சிரேஷ்ட மகளிர் அணிக்காக 2011 முதல் 142 போட்டிகளில் விளையாடியவர். இனிமேல் தான் பிரான்ஸுக்காக விளையாடப் போவதில்லை என கடந்த வார இறுதியில் அவர் அறிவித்தார். 2023 மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஆரம்பமாகுவதற்கு 5 மாதங்களே உள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ‘இது கவலையானது. ஆனால், எனது மனநலத்தை பாதுகாப்பதற்கான ஒரே வழி இதுவே. இந்த சூழ்நிலையில் உலகக் கிண்ணத்தில் நான் விளையாட மாட்டேன். எனது முகம் வலியை மறைக்கலாம் ஆனால், இதயம் வேதனையடைகிறது’ என 32 வயதான வெண்டீ கூறினார். லியோன் கழகத்துக்காகவும் 276 போட்டிகளில் பங்குபற்றி 96 கோல்களைப் புகுத்தியவர் வெண்டீ. கழக ரீதியான போட்டிகளில் 14 பிரெஞ்சு லீக் மற்றும் 8 ஐரோப்பிய கிண்ணங்களை அவர் வென்றுள்ளார். வெண்டீயின் விலகல் அறிவிப்பு வெளியாகி ஒரு மணித்தியாலத்தில் கடிடியாட்டோ டியானியும் விலகுவதாக அறிவித்தார். 27 வயதான டியானி தற்போதைய பிரெஞ்சு லீக் போட்டிகளில் அதிக கோல்களைப் புகுத்தியவர். ‘எனது அணித்தலைவரின் அறிவிப்பையடுத்து, தேசிய அணியுடனான தொடர்பை நான் துண்டித்துக் கொள்கிறேன். ஆழமான மாற்றங்கள் நடந்தால் மீண்டும் நான் வருவேன்’ என டியானி கூறினார். அத்துடன், 24 வயதான மேரி கடோடோவும் விலகுவதாக அறிவித்தார். பிரெஞ்சு மகளிர் பயிற்றுநரையோ கால்பந்தாட்ட சம்மேளனத்தையோ மேற்படி மூவரும் நேரடியாக குற்றம் சுமத்தவில்லை. எனினும், பிரெஞ்சு மகளிர் அணியின் பயிற்றுநர் கொறீன் டியாக் 2017 இல் பதவியேற்றபின், அவருக்கும் அணியினருக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன. அணித்தலைவர் பதவியிலிருந்து வெண்டீ விலகியதுடன் 4 வருடங்களின் பின் மீண்டும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டிருந்தார். இதேவேளை, இம்மூவரின் விலகல் குறித்து இவ்வாரம் …
February 27, 2023
-
-
இலங்கைசெய்திகள்
11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபருக்கு விளக்கமறியல்
by பூங்குன்றன்by பூங்குன்றன் 1 minutes read11 வயது சிறுமியினை அச்சுறுத்தி பல்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 44 வயது நபரை எதிர்வரும் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை மாவட்ட …
-
இலங்கைசெய்திகள்
வசந்த முதலிகே உள்ளிட்டோர் பிணையில் விடுதலை
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readபத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்டோர் …
-
இலங்கைசெய்திகள்
மின்வெட்டை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமாம்!
by பூங்குன்றன்by பூங்குன்றன் 0 minutes readமின்சாரக் கட்டணங்கள் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் மீண்டும் மின்வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என இலங்கை மின்சார சபையின், மின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார். …
-
இலங்கைசெய்திகள்
தேர்தலுக்கு நிதி வழங்கக் கோரும் மனுவை விசாரிக்க முடிவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஉள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்காக 2023 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்காமைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் …
-
அமெரிக்காஉலகம்ஐரோப்பாசெய்திகள்
உலக பொருளாதார நெருக்கடியில் ரோபோக்களும் சிக்கின
by இளவரசிby இளவரசி 1 minutes readஉலகளவில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக டுவிட்டர், கூகுள் மற்றும் மெட்டா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் அண்மைக்காலமாக தமது ஊழியர்களைப் பணி நீக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக …
-
இலங்கைசெய்திகள்
யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. இந்தச் …
-
-
இலங்கைசெய்திகள்
பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சாவு!
by தமிழ்மாறன்by தமிழ்மாறன் 1 minutes readஅரசுக்கு எதிராகக் கொழும்பில் நேற்று தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் சாவடைந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, …
-
இலண்டன்உலகம்செய்திகள்
தக்காளி விலை உயர்வால் பீட்சா நெருக்கடியை எதிர்கொள்ளும் இங்கிலாந்து
by இளவரசிby இளவரசி 1 minutes readதக்காளி விலை உயர்வுக்கு மத்தியில் இங்கிலாந்து பீட்சா நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இங்கிலாந்தில் தக்காளியின் £5ல் இருந்து £20ஆக உயர்வடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தக்காளி பற்றாக்குறையால் மக்களின் …