தக்காளி விலை உயர்வுக்கு மத்தியில் இங்கிலாந்து பீட்சா நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இங்கிலாந்தில் தக்காளியின் £5ல் இருந்து £20ஆக உயர்வடைந்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தக்காளி பற்றாக்குறையால் மக்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றான பீட்சா தயாரிப்பு சில நாட்களுக்கு பாதிக்கப்படலாம் என, கவலை எழுந்துள்ளது.
இவ்வாறான ஒரு நிலையில், தக்காளி இல்லாமல் வேறு பொருட்களைப் பயன்படுத்தி புதுமையான முயற்சிகளை சமையற் கலைஞர்கள் மேற்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதேவேளை, தக்காளியுடன்சில காய்கறிகள் மற்றும் பழங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சில முன்னணி பல்பொருள் அங்காடிகள் தமது வாடிக்கையாளர்களுக்கு குறித்த பொருட்களைக் கொள்வனவு செய்வதில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.