Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!

யாழ். வைத்தியசாலைக்குள் புகுந்த வன்முறைக் கும்பல்!

1 minutes read

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறைக் கும்பல் போதனா வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சப்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,

பட்டா ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறை பக்கம் உள்ள நுழைவாயில் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சித்துள்ளது.

இதை அவதானித்த வைத்தியசாலை காவலாளி அவா்களைத் தடுக்க முயன்ற போது காவலாளி மீது தாக்குதல் நடத்த முயன்றதுடன், அவா்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து காவலாளியை வெட்ட முயற்சித்துள்ளனா்.

இதையடுத்து சுதாகாித்துக் கொண்ட காவலாளி அவா்களைத் தடுக்க முயன்ற நிலையில், அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறைக் கும்பல் பின்னா் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

சம்பவம் தொடா்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸாா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More