தேவையான பொருட்கள்
கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி,
விழுதாக அரைத்துக் கொள்ளவும்),
வெல்லம் – கால் கப்,
தண்ணீர் – தேவையான அளவு,
தேங்காய்ப்பால் – ஒரு கப்,
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை,
நெய் – இரண்டு டீஸ்பூன்,
முந்திரி – பத்து,
திராட்சை – ஐந்து.
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும். பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய்ப்பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.
நன்றி -தினகரன்