Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் சீக்கியத் தலைவர் கொலை – கனடா பொலிஸாருக்காக காத்திருக்கும் இந்தியா

சீக்கியத் தலைவர் கொலை – கனடா பொலிஸாருக்காக காத்திருக்கும் இந்தியா

0 minutes read

கனடாவில் சீக்கியப் பிரிவினைவாதத் தலைவரைக் கொலை செய்த சந்தேகத்தில் மூன்று இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இந்தியர்கள் தொடர்பில் கனடா பொலிஸார் விவரம் வழங்கும் வரை காத்திருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஹர்தீப் சிங் நிஜார் என்ற சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் கடந்த 2023 ஆண்டுஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களுக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் தொடர்பிருக்கிறதா என்று புலனாய்வு நடத்துவதாகக் கனடா பொலிஸார் கூறினர்.

கைதான இந்தியர்கள் குண்டர்கும்பல் பின்னணி உள்ளவர்களைப் போல் தெரிவதாகவும் கனடா பொலிஸார் விவரம் வழங்கும்வரை காத்திருக்கவிருப்பதாகவும் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த, குறிப்பாக பஞ்சாபைச் சேர்ந்த குண்டர் கும்பல்களைக் கனடாவில் செயல்பட அவர்கள் அனுமதித்தது கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More