கொழும்பு ஆட்டுப்பட்டித் தெரு பகுதியில் 5 மாடி கட்டடம் ஒன்று நேற்று அதிகாலை தீப்பிடித்துக் கொண்ட நிலையில் தீயை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக ஆட்டுப்பட்டித் தெரு பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று அதிகாலை 5 மணியளவில் மேற்படி மாடிக் கட்டடம் தீப்பற்றிக் கொண்டதுடன் சுமார் ஒரு மணித்தியாலத்திற்குள் தீயணைப்புப் படை அதிகாரிகளால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கட்டடத்தில் முதல் மாடி மற்றும் ஐந்தாம் மாடியில் தீப் பற்றிக்கொண்டது. கிராண்ட்பாஸ் தீயணைப்பு படை பிரிவினர் உடனடியாக வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
மின் ஒழுக்கே தீப்பற்றியதற்கான காரணம் என சந்தேகப்படுவதாக ஆட்டுப்பட்டி தெரு பொலிசார் மேலும் தெரிவித்தனர்.