சேதனப் பசளை பயன்பாட்டுக்கு ஜேர்மனி போன்ற மேற்கிந்திய நாடுகள் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) மாலை அமைச்சரவைக்கு அறிவித்திருந்தார்.
இந்த திட்டத்திற்கு ஆதரவினை வழங்கவிட்டால் அந்நாடுகளில் இடம்பெறும் சேதனப் பசளை பயன்படுத்தியதான விவசாயத்தின் மீது தாக்கம் ஏற்படலாம் என்பதனால் குறித்த நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக கூறினார்.
நாட்டில் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் சில அரசியல் நோக்கம் இருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்த பருவத்திற்கான உரங்களின் பற்றாக்குறை குறித்து பிரச்சினையில் தலையிட்டு தீர்வை காணவேண்டும் என ஜனாதிபதி அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார்.
இதேவேளை சேதனப் பசளை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான தனது முடிவை மாற்றியமைக்க போவதில்லை என் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.