தொந்தி வராமல் வாழ நாம் உணவில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடம் வேண்டும்.
தொந்தி வியாதிக்கு தந்தி என்பது பழமொழி. தொந்தி வராமல் வாழ நாம் உணவில் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும். பசிக்கும் பொழுது பசியறிந்து சாப்பிட வேண்டும். அரைவயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காற்று செல்ல இடம் வேண்டும்.
தொந்தி வந்தால், அதிக தசைகள் குறைக்க சூரிய முத்திரை: சூரிய முத்திரை விரிப்பில் நிமிர்ந்து அமரவும் கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் கண்களை திறந்து மோதிர விரலை மடித்து உள்ளங்கையில் படும்படி வைத்து அதன்மேல் கட்டை விரலை வைத்து ஒரு அழுத்தம் கொடுக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடம் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும்.
நன்றி | மாலை மலர்