0
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை உதயபுரம் பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) இரவு
இனந்தெரியாத நபர்களினால் படகிற்கு தீ வைத்து எரியூட்டப்பட்டது.
நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் படகிற்கு தீ வைத்ததுடன் மீன்பிடி உபகரணங்களையும் வாளினால் வெட்டி சேதப்படுத்தியிருந்தனர்.
சேதப்படுத்திய காட்சி அங்கு வீடொ ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த
கண்காணிப்பு கமராவில் பதிவாகியிருந்தது.
இது தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.