இலங்கையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.
அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதேநேரம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 883 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.
அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளான 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.