Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று

1 minutes read

இலங்கையில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துச் செல்கிறது.

அதற்கமைய கடந்த 24 மணி நேரத்தில் 9 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 4 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து இலங்கையில்  கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 101 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேநேரம் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 883 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அதேவேளை, வைரஸ் தொற்றுக்கு உள்ளான 206 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More