ரஜினிகாந்த் நடிப்பில் 1981-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ‘நெற்றிக்கண்.’ இந்தப் படத்தின் தலைப்பை நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றுக்கு பெயராக சூட்டியிருக்கிறார்கள். இதில், நயன்தாரா பொலிஸ் அதிகாரியாகவும், கண் பார்வையற்றவராகவும் நடிக்கிறார்.
குற்றப் பின்னணியிலான திகில் படம் இது. பார்வையற்றவரான அவர் தனது புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே ‘நெற்றிக்கண்’ படத்தின் கதை. இதில், நயன்தாராவுடன் வில்லனாக அஜ்மல் நடிக்கிறார். இவர்களுடன் ஒரு நாய் முக்கிய வேடத்தில் நடிக்கிறது.