Friday, May 17, 2024

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா?

மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா?

1 minutes read

சென்னையில் நடிகை மனோரமாவின் மகன் தற்கொலைக்கு முயன்றாரா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.மறைந்த பழம்பெரும் திரைப்பட நடிகை மனோரமாவின் மகன் பூபதி (64). இவா் சென்னை தியாகராயநகா், நீலகண்டா மேத்தா தெருவில் வசித்து வருகிறாா். இந்நிலையில் பூபதி, கடந்த 6-ஆம் தேதி இரவு அதிக அளவில் தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் உடல்நிலை மிகவும் மோசமடைந்த பூபதி, ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அங்கு பூபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மாம்பலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து,விசாரணை செய்து வருகின்றனா். போலீஸாா் நடத்திய முதல் கட்ட விசாரணையில், பூபதிக்கு அதிக மது அருந்தும் பழக்கம் இருந்தது தெரியவந்தது.

ஊரடங்கு உத்தரவினால் மது கிடைக்காத விரக்தியில் பூபதி போதைக்காகவோ அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டரா என்ற கோணத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More