கொரோனா பொதுமுடக்கத்தால் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அனைத்து சினிமா நடிகர் நடிகைகளும் வீடுகளில் முடங்கி உள்ளனர். வீடுகளில் இருந்தபடி, கொரோனா விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் வேடிக்கையா சேலஞ்ச் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்கள்உடனான தொடர்பை புதுப்பித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை திரிஷா.
குவாரண்டைன் காலத்தில் திரிஷா கிடைத்த வாய்ப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறுப்படத்தில் நடித்துள்ளார்.
மேலும்,சமூக வலைத்தளங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்துவது, டிக்டாக் வீடியோ பதிவிடுவது என சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வந்தார்.
கடந்த ஜூன் மாதம் சமூக வலைத்தளங்களில் இருந்து தற்காலிகமாக விலகினார். இதையடுத்து சில வாரங்களுக்கு பின் மீண்டும் சமூகவலைதளத்தில் அவர் இணைந்தாலும், போட்டோ, வீடியோ பதிவிடுவதை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அனைத்து பழைய பதிவுகளையும் நீக்கி இருக்கிறார். தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 7 புகைப்படங்கள் மட்டுமே இருக்கின்றது. இதுதவிர மற்ற பழைய புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கி இருக்கிறார். என்ன காரணம் என்று தெரியாமல் ரசிகர்கள் முடியைப்பித்துக் கொண்டுள்ளனர்