Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் | மருத்துவமனை

பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் | மருத்துவமனை

1 minutes read

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் - மருத்துவமனை அறிக்கைஎஸ்.பி.பாலசுப்ரமணியம்பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள். 

எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

மருத்துவமனை அறிக்கை

தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார்.

பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சையும் தொடர்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More