Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜய்க்கு அபராதம் : `நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்!’ – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

விஜய்க்கு அபராதம் : `நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டும்!’ – சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!

1 minutes read
விஜய்

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் ஒரு இலட்சம்  ரூபா அபராதத்தை செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ரோய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கோரி நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு சென்னை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அப்போது இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் விஜய்க்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்தது. 

மேலும் ஒரு இலட்சம் அபராதத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு 2 வாரத்தில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More