Friday, May 17, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாஇயக்குனர்கள் மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்த ரேவதி

மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்த ரேவதி

1 minutes read

12 வருடங்களாக படங்களை இயக்காமல் இருந்த நடிகை ரேவதி, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

மீண்டும் இயக்குனராக அவதாரம் எடுத்த ரேவதி80-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரேவதி. இவர் நடிப்பில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது படங்களை இயக்குவதிலும் கவனமாக இருந்தார். முதல் படமாக 2002-ல் ‘மித்ர மை ப்ரெண்ட்’ என்ற ஆங்கிலப் படத்தை எடுத்தார். இந்தப்படம் இரண்டு விருதுகளைப் பெற்றது. இதையடுத்து 2004-ம் ஆண்டு ‘பிர் மிலேங்கே’ என்ற இந்தி படத்தை இயக்கினார். 

பின்னர் 2009-ல் மலையாளத்தில் வெளியான ‘கேரளா கபே’ என்ற படத்தை பத்து பிரபலமான இயக்குனர்கள் எடுத்தனர். அதில் ரேவதியும் ஒருவர். இதையடுத்து படங்களை இயக்காமல் இருந்து வந்த ரேவதி, தற்போது 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இயக்குனராக ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார். 

ரேவதி, கஜோல்

அதன்படி இந்தியில் தயாராகும் ‘தி லாஸ்ட் ஹரா’ என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கஜோல் நடிக்க இருக்கிறார். இதைத் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் உறுதிப்படுத்து இருக்கிறார் கஜோல்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More