நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்ட பிறகு நேரடியாக அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டிருந்தனர். இது அட்லீ படக்குழுவினருக்கு தெரிந்து இருவரையும் தேனிலவுக்கு செல்ல வற்புறுத்தினார். ஆனால் நயன்தாரா படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டினார்.
இதனால் ஷாருக்கான் தரப்பு தனது தேதி இப்போதைக்கு இல்லை. அதனால் படப்பிடிப்பை சில வாரங்கள் தள்ளி வைத்துக் கொள்ளலாம் என்று அட்லியிடம் தெரிவித்தது. அட்லியும் படப்பிடிப்பு இப்போதைக்கு இல்லை என்று நயன்தாராவிடம் தகவல் சொல்ல வேறு வழி இல்லாமல் விக்னேஷ் சிவனுடன் தாய்லாந்து நாட்டுக்கு தேனிலவு சென்றிருக்கிறார். இங்கு நயன்தாராவை சூரிய வெளிச்சத்தில் போட்டோ எடுத்து பதிவிட்டிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.