தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர வாரிசு நடிகர்களில் முக்கியமான நடிகரான சாந்தனு பாக்கியராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘இராவண கோட்டம்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
‘மதயானைக் கூட்டம்’ எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநரும், நடிகருமான விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘இராவண கோட்டம்’.
இதில் சாந்தனு பாக்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயல் ஆனந்தி நடித்திருக்கிறார். இவர்களுடன் பிரபு, இளவரசு, அருள்தாஸ், தீபா ஷங்கர், பி. எல். தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கண்ணன் ரவி குழுமம் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்திருக்கிறார்.
இந்தத் திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக், டீசர், ட்ரெய்லர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் மே மாதம் 12ஆம் திகதியன்று உலகம் முழுதும் படமாளிகையில் வெளியாகிறது.
கோடை விடுமுறையை குறி வைத்து இப்படம் வெளியானாலும், இதே திகதியில் மேலும் சில தமிழ் திரைப்படங்கள் வெளியாவதால் ரசிகர்களின் கவனத்தை ‘இராவணக்கோட்டம்’ ஈர்க்குமா..! என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.