June 7, 2023 6:57 am

சூரியின் ‘கொட்டுக்காளி’ படப்பிடிப்பு நிறைவு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கொட்டுக்காளி’ எனும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இருக்கிறது என பட குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்திருக்கிறார்கள்.

‘கூழாங்கல்’ எனும் திரைப்படத்தை இயக்கி சர்வதேச அளவில் கவனம் ஈர்த்த படைப்படியான பி. எஸ். வினோத் ராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘கொட்டுக்காளி’.

இதில் நடிகர் சூரி கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். எஸ். சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தை கணேஷ் சிவா தொகுத்திருக்கிறார்.

கிராமப்புற வீர விளையாட்டுகளில் ஒன்றான சேவல் சண்டையை மையப்படுத்தியும், சண்டை சேவலை வளர்க்கும் வீரர் ஒருவரின் வாழ்வியலை மையப்படுத்தியும் தயாராகும் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளரும், நடிகருமான சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் டைட்டில் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் பட குழுவினர் படப்பிடிப்பை நிறைவு செய்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. விரைவில் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்துவரும் சிவகார்த்திகேயன் சொந்தமாக பட நிறுவனத்தை தொடங்கி, ‘கனா’, ‘நெஞ்சமுண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’, ‘வாழி’, ‘டாக்டர்’, ‘டான்’ ஆகிய படங்களை தயாரித்து அதிலும் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அவருடைய தயாரிப்பில் தயாராகியுள்ள ‘கொட்டுக்காளி’ படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ‘விடுதலை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நகைச்சுவை நடிகரான சூரி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருப்பதால்.. இப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்