இந்தியன் சினிமாவை நேபாள மக்களை வெறுக்க செய்த ஆதிபுருஷ். இராமாயணத்தை அடிப்படியாக கொண்டு உருவான படம் என்றால் அது ஆதிபுருஷ் ஆகும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஆந்திரா மக்கள் இடம் மட்டும் உருவாக்கி இருந்த்தது என்று கூறலாம்.
இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் ராமர் வேடத்தில் நடிக்க, கிருத்தி சனோன், தேவ்தத் நாகே, சயிஃப் அலி கான், சன்னி சிங் உள்ளிட்டோர் ராமாயண கதாபாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.
ஆதிபுருஷ் மக்களின் எதிர்பார்ப்பை பெறாததற்க்கு காரணம் அந்த படத்தின் டீசர் ,ட்ரைலர்களே தோல்வியை சந்தித்தது எனலாம். இந்த திரைப்படம் குறித்த சில காலங்களுக்கு முன்பு உலகளவில் திரையிடப்பட்ட படம் ஆகும்.
இவை இப்படி இருக்க நேபாளிலும் இந்த திரை படம் வெளியிடப்பட்டது. ஆனால் அங்கு மக்கள் இனி இந்தியன் திரைப்படங்களே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு இதன் உருவாக்கம் மோசமாக உள்ளது.
அதிலும் சீதை கதாபாத்திரத்தின் உருவாக்கம் அங்கு வாழும் மக்களை பாதிக்கும் வண்ணம் உள்ளதாக கூறப்படுகிறது.