தேவையான பொருட்கள் :
பச்சைப்பயறு – அரை கப்
தேங்காய் துருவல் – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
தாளிக்க
கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை
செய்முறை
அடுப்பில் ஒரு கடாய் வைத்து அவற்றில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடேறியதும், அவற்றில் பச்சைப்பயறை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து கொள்ளவும்.
பின் அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாய், சிறிதளவு தேங்காய் துருவல், சிறிதளவு புளி ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும்.
பின் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்சியில் மைபோல் அரைக்க வேண்டும்.
பின்பு கடுகு, உளுந்தம்பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியுடன் கலந்து அனைவருக்கும் பரிமாறவும்.
இது இட்லி தோசைக்கு ஏற்ற சட்னி வகைகள் என்பதால் வீட்டில் உள்ளவர்கள் இந்த சட்னியை கொஞ்சம் கூட மிச்சம் வைக்கமாட்டார்கள்.
உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.