தேவையானவை:
இறால்(சுத்தம் செய்தது) – 200 கிராம்,
கார்ன் மாவு – 1 ஸ்பூன்,
மைதா மாவு – 1 ஸ்பூன்,
மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்,
இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன்,
பெரிய வெங்காயம் – 1,
குடை மிளகாய் – 1,
வெங்காயத்தாள் – 2 கொத்து,
பூண்டு – 10,
சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
சில்லி சாஸ் – 2 டேபிள்ஸ்பூன்,
டொமெட்டோ சாஸ் – 3 டேபிள்ஸ்பூன்,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
சர்க்கரை – 1 ஸ்பூன்,
எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
முதலில் இறாலை சுத்தம் செய்து, அதில் உப்பு மற்றும் ஊறவைக்க தேவையான பொருட்களோடு சேர்த்து பிரட்டி 15 நிமிடம் ஊற வைக்கவும். குடை மிளகாயை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பெரிய வெங்காயத்தையும், பூண்டையும் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயதாளையும் நறுக்கிக் கொள்ளவும். இறாலை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுத்துக் கொள்ளவும். பின் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடைமிளகாய், பச்சைமிளகாய் சேர்த்து வைத்து நன்றாக வதக்கவும். பிறகு அதில், இந்த கலவைக்கு மட்டும் தேவையான சிறிது உப்பு, சர்க்கரை, சோயா சாஸ், சில்லி சாஸ், டொமெட்டோ சாஸ் சேர்த்து சாஸின் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வெங்காய தாள் சேர்த்து ஒரு சுற்று வதக்கி பொரித்த இறாலை சேர்த்து பிரட்டி இறக்கவும்.