பெரிய எலுமிச்சை அளவு புளியை வெறும் வாணலியில் மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி கொள்ளவும்
ஆறியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்
அரை கிலோ பழுத்த தக்காளியை தண்ணீர் விடாமல் பேஸ்ட் பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்
அடுப்பில் வாணலியை வைத்து 8 டேபிள்ஸ் பூன் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒரு டீஸ்பூன் கடுகு சேர்த்து தாளித்து அரைத்தது வைத்த தக்காளி பேஸ்ட் புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறி மூடி போட்டு 20 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்
பின் 1/2 டீஷ்பூன் பெருங்காயதூள் , தேவையான அளவு உப்பு, 4 டீஷ்பூன் மிளகாய்த்தூள் , 1/2 டீஷபூன் வெந்தயப்பொடி, 1டீஷ்பூன் கடுகு பொடி சேர்த்து மசாலா வாசனைபோகும் வரை நன்கு வதக்கவும்.
கை படாமல் ஒரு சாடியில் எடுத்து வைத்து பயன் படுத்தவும்
நன்றி:இணைய இதழ்